Wednesday, October 24, 2007

கல்யாணசுந்தரம் -4


<>ப(பா)ட்டுக்கோட்டை

கல்யாணசுந்தரம்!<>

தொழிலாளி...முதலாளி..!

உழைப்பே உயர்வுதரும் என்பதில் ஆழ்ந்த
நம்பிக்கை கொண்ட கவிஞர், வெற்றி
என்கிற ஏணிப்படிகளில் ஏறிப்போன
தொழிலாளத் தோழர்களை பட்டியலிடுகிறார்.

பட்டியலோடு நிறுத்தாமல் அவர்கள் வாழ்வியல்
உயரவும் வழிசொல்லிக் கொடுக்கிறார்.

" வீரத் தலைவன் நெப்போலியனும் வீடு
கட்டும் தொழிலாளி ரஷ்ய தேசத்தலைவர்
மார்சல் ஸ்டாலின், செருப்புத் தைக்கும் தொழிலாளி!

விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு காரு ஓட்டும்
தொழிலாளி!

விண்வொளிக் கதிர் விவரம் கண்ட, சர்.சி.வி.இராமனும்
தொழிலாளி!

படிப்பும் தேவை - அதோடு உழைப்பும் தேவை -
முன்னேற படிப்பும் தேவை - அதோடு உழைப்பும்
தேவை. " - என்று சொல்லி தொழிலாளிக்கு
நெஞ்சுரமூட்டுகிறார்.

இதேபோல காந்தி கனவு கண்ட கிராமங்களில்
தொழிலாளர்களின் நிலையை அப்பட்டமாகச்
சொல்லி ஆவேசம் கொள்ளச்செய்கிறார்...
இந்தவரிகளில்..."

புகையும் நெருப்பிலாமல் எரிவது எது?

பசித்து வாடும் மக்கள் வயிறு அது!
என்று வாழும் வரலாறாக இருக்கிற
கிராமங்களின், வறுமையும் வாழ்வும்
பின்னிப் பிணைந்து கிடக்கிற அவலத்தை
உடைத்து நொறுக்குகிற வரிகள்.

அதே நேரத்தில் வர்க்க முரண்பாட்டைச்
சுட்டும்போது , " வசதியிருக்கிறவன் தரமாட்டான்,
வயிறு பசிக்கிறவன் விட மாட்டான்.." என்று
உழைக்கும் தொழிலாளரின் உள்ளக் குமுறலை
வெளிபடுத்தவும் செய்கிறார்.

" நல்லவர் போல உலக மீது நரியும் கழுகும்
உலவும்போது நம்மை இன்பம் நாடி வருமா?
ஏமாத்துப் போர்வையிலே ஏழைகளின்
வேர்வையிலே எக்காளம் போடுகிற கூட்டம்...
மக்கள் எதிர்த்துக்கிட்டா எடுக்கணும் ஓட்டம்!..
என்று மக்களுக்கு போர்க்குணத்தை ஊட்டுகிறார்.

துணிந்தால்தான் வாழ்வு இனிக்கும் இல்லை
யென்றால் துன்பங்கள்தான் என்பதை,
" துணிந்தால் துன்பமில்லை; சோர்ந்துவிட்டால்
இன்பமில்லை." என்கிறார்.

சமூக ஏற்றத் தாழ்வினை " பசி பட்டினி நோய்
நொடி நிரம்பியது, வாழும் உலகம் வஞ்சக உலகம்..."
என்றும்
" அதிகமாகச் சேர்த்துக்கிட்டு அல்லும் பகலும்
பார்த்துக்கிட்டு இருப்பவர் உண்டு" என்றும்
" உலகத்தை நினைத்தாலே உடம்பு நடுங்குது,
ஊருகெட்ட கேட்டைப் பார்த்து நீதி தூங்குது..!"
என்றும் நாட்டு நடப்பைக் கண்டு பதறுகிறார் கவிஞர்.

இது உலகம் உள்ளளவும் பொருந்தும் தத்துவ
முத்துக்கள் அல்லவா?

-ஆல்ப‌ர்ட்.

No comments: