Wednesday, October 24, 2007

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

கல்யாணசுந்தரம்!

யார் இந்தக் கல்யாணசுந்தரம்?
அவர் பெயரைச்சொல்வதைவிட
ஊரைச் சேர்த்துச் சொன்னால்
அறியாதார் எவரும் இருப்பரோ?

" ஞாலத்திலே நம்ம மனம் தமிழ் இனத்தின்

குலத்தைக் காக்க வேண்டும்..." " அகிலம்
போற்றும் தமிழறம் வாழ்க! "
என்று தமிழ் வாழப் பாடிய கவிஞன் அவன்!

பட்டுக்கோட்டையார் திரைப்படக் கவிஞர்தாம்;

ஆனாலும் மெட்டுக்குப் பாட்டு எழுதியவரில்லை!

பட்டுக்கோட்டையார் பாமரர் கவிஞர்தாம்;

ஆனாலும் ஆகாயத்தையும் அகலமாக்கிவிடுகிற
அறிவிற்சிறந்தவர்!

பட்டுக்கோட்டையார் எளிமையாகப்
பாடியவர்தாம்; ஆனாலும் வலிமையான
கருத்துக்களுக்கு உருக் கொடுத்தவர்!

பட்டுக்கோட்டையார் பாட்டாளிகளுக்காகப்
பாடியவர்தாம்; ஆனாலும் பட்டதாரிகளிலும்
பண்பட்ட சிந்தனையாளர்!

பட்டுக்கோட்டையார் லட்சியங்களுக்காகப்
பாடியவர்தாம்; ஆனாலும் காசுக்காக சிறகு
விரிக்காத கவிக்குயிலவர்!

ஆம்!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற
கவிஞனை நினைவு கூர்ந்திடும் வகையில்
ஒரு சிறு தொடரை உங்களோடு
பகிர்ந்துகொள்கிறேன்.


மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை

கல்யாணசுந்தரம். ( 1930 -1959 )"

" தமிழ் மொழிக்கு அழியாத உயிரும்
ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து
காவியங்கள் செய்யப்போகிற வர கவிகளுக்கு....
- எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து

கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும்
மெட்டு, இவற்றினையுடைய காவியமொன்று
தற்காலத்திலே செய்து தருவோன் நமது
தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்.

ஓரிரண்டு வருஷத்து நூற் பழக்கமுள்ள தமிழ்

மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி
எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறை
படாமலும் நடத்தல் வேண்டும்..." என்று பாட்டுக்கொரு
புலவன் பாரதி 1912ம் ஆண்டு பாஞ்சாலி சபதத்தை
படைத்தளிக்கப் போகுமுன் கோரிக்கை விடுக்கிறான்.

இதற்குப் 18 ஆண்டுகளுக்குப் பிறகு 1930ம் ஆண்டு

ஏப்ரல் 13ல் பிறந்து பாரதியின் கனவுக்கு உருவம் கொடுத்த கவிஞன்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

-ஆல்ப‌ர்ட்.

1 comment:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பாட்டுக்கு கோட்டை கட்டிய நம் பட்டுக்கோட்டையாரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி! உஙகள் வலைப்பூ மனம் வீச வாழ்த்துக்கள்.

அன்புடன் ஜோதிபாரதி
http://www.jothibharathi.blogspot.com/